அதிபர்-ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு!

Date:

ஆசிரியர் ,அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.அதன் பிரதிநிதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய் கிழமை முரண்பாடுகள் குறித்து அமைச்சரவை உபக்குழுவில் அறிவிக்குமாறு தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.சந்திப்பு அன்றைய தினம் மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி அதிபர் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 34வது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...