இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் – மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!

Date:

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் வைத்தியர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.மேலும் தேசியக்கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் ஊடாக மலர்கள் தூவப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...