கடைசி 14 நாட்கள் இலங்கையில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்த இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானித்துள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு மட்டுமே தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. கடைசி 14 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தால் அவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செல்பவர்களுக்கு அன்றைய தினமும், அடுத்த ஒன்பதாவது நாளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் மட்டுமின்றி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் உகாண்டா நாட்டினருக்கும் இதே நடைமுறையில் சுற்றுலா விசா வழங்க தீர்மானித்துள்ளது.