சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை!

Date:

ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு எரிவாயு கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.

எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 75 சிலிண்டர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக கேஸ் விற்பனையாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...