சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு 780 மில்லியன் டொலர் நிதி!

Date:

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி,780 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், 300 மில்லியன் டொலர் கடனாக வழங்கவுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படவுள்ள குறித்த கடன் தொகையானது, இன்று (31) நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த நிதி கிடைப்பதன் மூலம், நாட்டின் அந்நிய செலாவணி சந்தையின் பணப்புழக்கமும், ஸ்திரத்தன்மையும் பரிமாற்ற விகிதத்தின் மூலம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...