தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேறு பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்-பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்!

Date:

தடுப்பூசி ஏற்றுவதற்காக, தமது பிரதேசத்தை தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்பவர்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.

மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்வது, தங்களது கிராம சேவகர் பிரிவிலுள்ள தடுப்பூசி ஏற்றல் மையமாகவோ அல்லது தடுப்பூசி ஏற்றல் மையத்திற்காக பெயரிடப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவாகவோ இருக்க வேண்டும்.

எல்லா இடங்களிலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் சென்றால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க முடியாது.பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக, சிலர் தங்களது தொடர்புகளைப் பயன்படுத்தி, மேல் மாகாணத்தில் இருந்து புத்தளம் மாவட்டத்திற்கு செல்கின்றனர்.இதனைத் தவிர்க்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...