தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க முடியாது!

Date:

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாது என்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாகுமென்று கல்வி அமைச்சரினால் இன்று ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 

இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர், அதிபர் சம்பளக் கொடுப்பனவு, அரச ஊழியர்களின் நெருக்கடி என்பன பற்றி அடுத்த வரவு – செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அரசியல் ரீதியாக வீழ்ச்சி கண்டவர்கள் ஆசிரியர், அதிபர் நெருக்கடியை பாலமாக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். குறுகிய நோக்கங்களுக்காக ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

 

கொரோனா வைரஸ் பரவலினால் சகல நாடுகளும் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை போன்று இலங்கையும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நாடுகள் ஊழியர்களுக்கான சம்பளத்தை 50 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...