நாட்டின் தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு!

Date:

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் நேற்று (20)இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பதவியேற்றதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஒருவரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.அவசர வைத்திய வசதிகளை நாட்டுக்கு வழங்குவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி பிராணவாயு விநியோகித்தல் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...