நாளை சில பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்!

Date:

வத்தளை, மாபோல, ஹூனுபிடிய உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (18) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோக அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக நாளை முற்பகல் 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, வத்தளை, ஹெந்தலை, எலகந்த, அல்விஸ் நகர், வெலிகடமுல்ல, கெரவலபிடிய, மாபோல, ஹுனுபிடிய, வெடிகந்த, வேவெல்துவ, பிரசங்கவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பாதிலிய முனை வீதி, தலுபிடிய வீதி மற்றும் அக்பார் வீதி ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...