நாளை முதல் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும்- ஜானக வக்கும்புர!

Date:

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லங்கா சீனி நிறுவனத்தின் ஊடாகவும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் சீனியை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் சீனியை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்: கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு!

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை...

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06) முதல் ஆரம்பிப்பதற்குத்...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: மோதல் நிலை குறித்து விசாரிக்க விசேட குழு!

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் நேற்றைய (05) தினம் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...