புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு!

Date:

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், பொது சேவைகள் இடம்பெறும் முறைமை மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.இதற்கமைய, வீட்டிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளையும், பல்பொருள் அங்காடிகள், அத்தியாவசிய சேவைகள் என்பனவற்றை இணையம் மூலம் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெதுப்பக உற்பத்திகள், கடலுணவு விநியோகம் என்பனவற்றை நடமாடும் சேவையில் முன்னெடுக்க முடியும்.இதேநேரம், கொவிட் அல்லாத மரணங்களின் இறுதிக் கிரியைகள், 24 மணிநேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள், ரயர் சேவைகள் என்பனவற்றை அத்தியாவசியமான ஊழியர்களுடன் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...