அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறிய ஞானசாரவிற்கு எதிராக முஸ்லிம் எம்பிக்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – இராசமாணிக்கம் சாணக்கியன் அதிரடி கேள்வி!

Date:

இஸ்லாமியர்களின் இறைவனான அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் வாய்திறக்கவில்லை ஏன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...