இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளது

Date:

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளன.

ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் ஆடவர் அணி பாகிஸ்தானில் 2021 அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இரண்டு இருபது 20 போட்டிகளில் விளையாட இருந்தது.

அதேநேரத்தில் மகளிர் அணி இரண்டு இருபது 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட வரையறுக்கப்பட்ட ஓவர் தொடருக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்தது.

இதேவேளை, அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, இறுதி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை கைவிட்டு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...