இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு! இருபதுக்கு 20 கிண்ணம் தென்னாப்பிரிக்கா வசம்!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்த நிலையில் குசல் ஜனித் பெரேரா 3 பவுண்டரிகள் அடங்களாக அதிகபடியாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 23 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.அணி சார்பில் குயின்டன் டி கொக் 7 பவுண்டரிகள் அடங்களாக 59 ஓட்டங்களையும், ரீசா ஹென்ரிக்ஸ் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்களாக 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இதற்கமைய தென் ஆபிரிக்க அணி 3 -0 என்ற அடிப்படையில் இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...