இலங்கை கிரிக்கட் வாரியத்தின் விசேட அறிக்கை

Date:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய இலங்கை தேசிய அணியின் சில வீரர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவில்லை அல்லது வேண்டுமென்றே களத்தில் சரியாக செயல்படவில்லை என்று குறிப்பிட்ட சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கட் வன்மையாக மறுக்கிறது.

தேசிய அணியின் எந்தவொரு வீரருக்கும் எதிராக ‘கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து’ இலங்கை கிரிக்கட் அத்தகைய புகாரைப் பெறவில்லை.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே அணியினர் டி20 தொடரிலும் பங்கேற்றனர் என்பதை இலங்கை கிரிக்கெட் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் தரவரிசையில் முக்கிய புள்ளிகளைப் பெற்றது.

இலங்கை தேசிய அணி, கடந்த காலங்களில் இருந்து, முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்று சரியான திசையில் செல்வதன் மூலம் முன்னேறுகிறது என்பது ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டு ஒப்புக்கொள்ளப்படுகிறது.

எனவே, ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில், தவறான செய்திகளை பதிவிடாது, ஊடக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அந்தந்த செய்தி நிறுவனங்களிடம் கோர விரும்புகிறது.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...