ஜப்பான் நாட்டின் கடலோரப் பகுதியில் நேற்று(29) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான இந் நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 400 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.இருப்பினும் கடல் மையத்தில் நிலநடுக்கம் உருவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.மேலும் நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று குறிப்பிடத்தக்கது.