தனிமைப்படுத்தல் விடுதிகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

Date:

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று  காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கப்படும் விடுதிகளில் அதிக கட்டணம் அறவிடும் மோசடியான செயற்பாடு தொடர்பில் செய்திகள் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டது.

குறித்த தனிமைப்படுத்தல் விடுதிகளில் இடம்பெறும் இவ்வாறான மோசடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

அதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் உள்நாட்டு மற்றும்

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு சில மணித்தியாலங்களுக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...