பஞ்சாப் கிங்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 126 ஓட்டங்களை சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மர்க்ரம் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர் 19 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்நிலையில், 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.அணிசார்பில் அதிகபடியாக ஜேஸன் ஹோல்டர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ரவி பிஸ்னொய் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...