பஞ்சாப் கிங்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 126 ஓட்டங்களை சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மர்க்ரம் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர் 19 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்நிலையில், 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.அணிசார்பில் அதிகபடியாக ஜேஸன் ஹோல்டர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ரவி பிஸ்னொய் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...