பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளை விசேட தீர்மானம்!

Date:

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து நாளை (24) பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சு சமீபத்தில் கல்வி அமைச்சிற்கு வழிகாட்டுதல்களை பெற்றுக் கொடுத்திருந்தது.அந்த வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, மீண்டும் பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளைய தினம் (24) விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது உரிய சுகாதார வழிகாட்டுதல்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...