புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம்!

Date:

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு காவல்துறை மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமந்த இந்திவர சமரசிங்க காவல்துறைமா அதிபரிக்கு எழுத்து மூல கோரிக்கையினை விடுத்திருந்தார்.ஒரு வருடத்திற்கு மேலாக புத்தக விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன், அத்தியாவசிய புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காரணிகளை கருத்திற்கொண்டு புத்தக விற்பனையகங்களை மீள திறப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் காவல்துறைமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...