ஆப்கானிஸ்தான் விடயத்தில் குவாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு!

Date:

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆப்கானிஸ்தானை பொருத்தமட்டில் குவாட் நாடுகளான அமெரிக்கா, ஆவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்திய தூதரக பொருளாதார மனித உரிமை கொள்கைகள் விடயத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகளுக்கு எதிராக செயல்பட ஆப்கானிஸ்தான் அனுமதிக்கக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தை அமுல் செய்வது என்று குவாட் நாடுகள் தீர்மானித்துள்ளன.

குவாட் நாடுகள் சீனாவை பெயர் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்கா விட்டாலும் அவை சீனாவுக்கு எதிரான முடிவை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதை உலகுக்கு வெளிப்படையாக உணர்த்தியுள்ளன.

யூனியன் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிட்ட இந்து பசிபிக் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பது என்று குவாட் உச்சிமாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுதந்திரமான கடற் பயணம், விமானப் பயணம் ஆகியவற்றை உறுதி செய்வதோடு நாடுகளுக்கு இடையிலான எல்லை தகராறுகள் மற்றும் அவர்களுக்கு ஜனநாயக் முறையில் சம்பந்தப்பட்ட நாடுகளின் நில ரிமை இறையாண்மைக்கு பாதிப்பு இல்லாமல் தீர்வுகாண வேண்டும் என்று குவாட் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வடகொரியா பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்று குவாட் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருவ நிலை மாறுதல் தொடர்பாக உச்சிமாநாட்டில் மிகச் சுருக்கமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் தேசிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப 20 50 ஆம் ஆண்டில் மாசு வெளியாவதை 100% முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...