இத்தாலிக்கு சென்ற பிரதமர் நாடு திரும்பினார்

Date:

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்.

அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 10ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.

இந்த விஜயத்தில், பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினரும் சென்றிருந்தனர்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாக குறித்த விஜயம் அமைந்திருந்தது.

அதன்படி, ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும் கொரோனா பரவல், நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...