இத்தாலிக்கு சென்ற பிரதமர் நாடு திரும்பினார்

Date:

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்.

அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 10ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.

இந்த விஜயத்தில், பிரதமருடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினரும் சென்றிருந்தனர்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாக குறித்த விஜயம் அமைந்திருந்தது.

அதன்படி, ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும் கொரோனா பரவல், நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...