சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தேவைகளை அடையாளம் கண்டு, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினையும் அவர் நிராகரித்துள்ளார்.