உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் புதிய திருப்பங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி- ரமீஸ் ராஜாவின் அதிரடி முடிவு!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹைடன் ,தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் பிலான்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ரமீஸ் ராஜா அறிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ரமீஸ் ராஜா லாகூர் மைதானத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட மிஸ்பாஹ் உல் ஹக் அதே போன்று பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் அண்மையில் உலக கிண்ண அணி அறிவிக்கப்பட்ட பின் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.இந் நிலையில் நியூசிலாந்துடனான உள்ளூர் தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக சக்லைன் முஷ்தாக், பந்துவீச்சாளராக அப்துல் ரசாக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே அடுத்து வர உள்ள மிக முக்கியமான உலக்கிண்ண தொடருக்கு மத்தியூ ஹெய்டன்,பிலான்டர் ஆகியோர் பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜா நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...