உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசு ஆலோசனை!

Date:

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரக் காலம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த ஆட்சிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கான அதிகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு காணப்படுகிறது.எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.தற்போதைய கொவிட் பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக பொதுமக்களுக்கு முறையான சேவைகளை செய்ய வாய்ப்புகள் அமையவில்லை எனவும், எனவே இதனைக் கருத்திற்கொண்டு தேர்தலை ஒத்திவைப்பதற்கான முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...