உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசு ஆலோசனை!

Date:

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரக் காலம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த ஆட்சிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கான அதிகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு காணப்படுகிறது.எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.தற்போதைய கொவிட் பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக பொதுமக்களுக்கு முறையான சேவைகளை செய்ய வாய்ப்புகள் அமையவில்லை எனவும், எனவே இதனைக் கருத்திற்கொண்டு தேர்தலை ஒத்திவைப்பதற்கான முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...