கரிம உர இறக்குமதிக்கு அனுமதி!

Date:

இதுவரை நெல் சாகுபடிக்கு மாத்திரம் கரிம உரம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (16) முதல், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் பிற பயிர்களுக்கு கரிம உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு குறித்த உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்திற்குள் அனைத்துப் பயிர்களுக்கான உரத்தையும் தட்டுப்பாடின்றி சந்தையில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக தனியார் துறைக்கு உரம் இறக்குமதி செய்ய ​அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக நெல் சாகுபடிக்கு தேவையான கரிம உரங்கள் உள்நாட்டிளேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் போதிய அளவு கரிம நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் கூறினார்.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 300 கிலோ நைட்ரஜன் மற்றும் 45 கிலோ பொட்டாசியம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...