கரிம உர இறக்குமதிக்கு அனுமதி!

Date:

இதுவரை நெல் சாகுபடிக்கு மாத்திரம் கரிம உரம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (16) முதல், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் பிற பயிர்களுக்கு கரிம உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு குறித்த உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்திற்குள் அனைத்துப் பயிர்களுக்கான உரத்தையும் தட்டுப்பாடின்றி சந்தையில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக தனியார் துறைக்கு உரம் இறக்குமதி செய்ய ​அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக நெல் சாகுபடிக்கு தேவையான கரிம உரங்கள் உள்நாட்டிளேயே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் போதிய அளவு கரிம நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் கூறினார்.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 300 கிலோ நைட்ரஜன் மற்றும் 45 கிலோ பொட்டாசியம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...