களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(10) காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.
மேலும், நாளை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிவரை பயாகல, போம்புவல, மக்கொன, பேருவளை,தர்கா நகர், அளுத்கம, பிலமினாவத்த, களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.