கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.
அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் 50 மில்லியன் அமெரிக்க டொலர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அரச வங்கிகளின் ஊடாக, இறக்குமதியாளர்களுக்கு இந்த பணம் விநியோகிக்கப்படவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில், அதனை வழங்க தயார் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்