பஞ்சாப் கிங்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 126 ஓட்டங்களை சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மர்க்ரம் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர் 19 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்நிலையில், 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.அணிசார்பில் அதிகபடியாக ஜேஸன் ஹோல்டர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ரவி பிஸ்னொய் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...