பால்மா விலையை 200ரூபாயினால் அதிகரிக்க தீர்மானம்?

Date:

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களின் விலையை 200ரூபாயினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் பசில்ராபக்சவுடனான சந்திப்பின் பின்னர் பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ருபாயினால் அதிகரிக்க தீhமானித்துள்ளனர்.

நேற்றைய சந்திப்பின்போது பால்மா இறக்குமதியாளர்கள் பல வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சர்வதேச உள்நாட்டு சந்தைகளின் நிலவரம் வரிகள் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் நாணயம் பெறுமதி இழந்துள்ளதால் சர்வதேச விலைகள் கப்பல்கட்டணங்கள் அதிகரித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி பால்மா இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக விலைகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துவந்துள்ளனர்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...