புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்!

Date:

புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கான வாகன சேவை நேற்று முதல் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த ஊர் மக்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் மற்றும் பங்களிப்புகளை வழங்கிய அனைவருக்கும் புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

இவ் வாகனம் புத்தளம் நகர எல்லைக்குள் இலவசமாகவும் ,தூர இடங்களுக்கான சேவைகளின் போது  கட்டண அறவீட்டுடன் சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெறப்படுகின்ற பணம் வாகன பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காக பயன்படுத்தப்படும் என இச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.இம் மகத்தான சேவைகளை செய்த புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு எமது பாராட்டுக்கள்.

 

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...