மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்த கருத்து

Date:

கொரோனாவால் கல்வியை தொடர முடியாதுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுத்து, விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதே தற்போது அரசாங்கத்தின் நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப் பெறும் முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும்.

அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் காலம் தாழ்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையிலிருந்து மாணவர்களை மீட்டு , துரிதமாக பரீட்சைகளை நடத்துவதே எமது தற்போதைய தேவையாகும். அதற்கமைய மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக முக்கியத்துவமுடையவையாக உள்ளன.

மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளே வழங்கப்படவுள்ளன. எனவே எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்களையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...