மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்!

Date:

அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை மறுதினம் (14) மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஓய்வு பெறவுள்ளார்.இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்னர் நேற்றைய தினம் மிஹிந்தலை ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி தம்மாரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதேவேளை, அஜித் நிவாட் கப்ராலின் வெற்றிடத்திற்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியேற்பு எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகும். நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளது. ஜயந்த கெட்டேகொட அந்த வெற்றிடத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...