அரிசி விலை அதிகரித்தமைக்கான காரணம்-அமைச்சர் விளக்கம்!

Date:

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதி தெரிவித்திருந்த போதிலும் உறுதி மொழியை நிறைவேற்ற தவறிவிட்டதாக தெரிவித்த அமைச்சர் அரசாங்கம் மேற்கொள்ளும் பொருளாதார முகாமைத்துவத் தீர்மானங்களை சில தரப்பினர் பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்வதாகவும் கூறினார்.

பொருளாதாரம் சம்பந்தமான முறையான அனுபவமற்றவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பிழையென அர்த்தப்படுத்திக் கொள்கொள்கின்றனர். 623 பொருட்களுக்கு 100 வீத நிதி வைப்பை மத்திய வங்கி அறிவித்திருப்பது, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காகும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...