வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான புதிய நடைமுறை இன்று நள்ளிரவு முதல்!

Date:

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு (72 மணிநேரத்துக்கு) முன்னதாக செய்து கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (28) நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமுலாக்கப்படவுள்ளதுடன், இவ்வாறு இலங்கை வருபவர்கள் நாட்டுக்கு வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக பூரணமாக தடுப்பூசிகளை பெற்றவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேற்படி விடயம் தொடர்பான தொழில்நுட்ப குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று(28)இடம்பெற்ற செய்தியாளர் சந்திபில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

பூரணமாக தடுப்பூசிகளை பெற்றிராத வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, தமது விடுதிகளில் உயிர்குமிழி நடைமுறையை கடைபிடிக்க வசதியளிக்கப்படுவதுடன் அதன்போது, பிசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு திரும்பும் (பூரண தடுப்பூசி பெறாத) இலங்கையர்களுக்கு விமான நிலையத்திலோ, தாம் தங்கவுள்ள விடுதியிலோ பி.சிஆர் பரிசோதனை செய்துகொள்வதற்கு, குறித்த பரிசோதனையில் தொற்று உறுதி ஏற்படவில்லை என பெறுபேறு கிடைக்குமாயின் அவர்களை வீடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதன்பின்னர், மீண்டும் 12 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்போது, தொற்று உறுதியாகாவிடின் அவர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...