JUST IN:யோர்க்கர் கிங் லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான, யோர்க்கர் கிங் என்றழைக்கப்படும் லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

38 வயதாகும் லசித் மாலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். எனினும் தொடர்ந்தும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்த லசித் மாலிங்க, இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2004 (17வருடங்கள்) ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகம் பெற்றுக்கொண்ட லசித் மாலிங்க இன்று வரையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.மேலும், w.w.w.w.w O இதுபோன்ற ஒரு ஓவரை இலங்கையர் ஒருவராலேயே வீச முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்கவின் ஓய்வு குறித்து மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் உட்பட லசித் மாலிங்கவின் இரசிகர்கள் தங்களுடைய கவலையை பதிவிட்டு வருவதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகின்றது.

 

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...