அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம் குறித்து முன்னாள் சபாநாயகர் வெளியிட்ட விடயம்!

Date:

மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வேளையில் அவர்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய உணவுப்பொருட்களை செயற்திறனான வகையில் பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் தோல்வியடையும் வேளையில், அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என கரு ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் சீனியின் சந்தை விலை 85 ரூபாயாக காணப்பட்டதுடன், போதுமானளவு சீனி கையிருப்பில் உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் நேற்று முன்தினம் சீனியின் சந்தைவிலை 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...