இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளது

Date:

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளன.

ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் ஆடவர் அணி பாகிஸ்தானில் 2021 அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இரண்டு இருபது 20 போட்டிகளில் விளையாட இருந்தது.

அதேநேரத்தில் மகளிர் அணி இரண்டு இருபது 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட வரையறுக்கப்பட்ட ஓவர் தொடருக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்தது.

இதேவேளை, அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, இறுதி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை கைவிட்டு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...