ஈராக்கில் எர்பில் விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல்!

Date:

ஈராக்கின் வடக்கு பகுதியிலுள்ள எர்பில் (Erbil) சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குர்திஸ் கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் விடுத்த இரண்டாவது அறிக்கையில் ஆளில்லா விமான தாக்குதலே நடத்தப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் ஆறு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் எர்பில் விமான நிலையத்திற்கு சேதம் எவையும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...