ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,
இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும் முஸ்லிம்களின் இறைவன் (அல்லாஹ்)வுக்கு எதிராக பிரபலமான துறவி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்,
இது இலங்கை முஸ்லிம்
சிறுபான்மையினரை கவலையடையச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது
மேலும் அறிக்கை வெளியிட்ட தேரருக்கு எதிராக முஸ்லிம்களை ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை முஸ்லிம்களை அதிகாரிகள் வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
LNN