பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

Date:

இத்தாலிக்கு பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கவேண்டும் முன்னாள் சட்டமா அதிபரை கைதுசெய்யவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு நீதிகோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கத்தோலிக்க மதகுருமாரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என திருச்சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...