களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்!

Date:

அளுத்கம -மத்துகம, அகலவத்த ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நாளைக் (06) காலை 8 மணிமுதல் அமுலாகும் வகையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பேருவளை, அளுத்கம, தர்காநகர், பெந்தர, களுவாமோதர, ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும்.

இதனை விட, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளிலும் 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் மறுநாள் பிற்பகல் 2 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...