குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

Date:

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மாத்தறை முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யு  திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 2 பிரதிக் காவல்துறை மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் 6  காவல் துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபராக பிரசாத் ரணசிங்க, அப் பதவியில் உள்ள நிலையில் காவல்துறை தலைமையகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.அத்துடன் காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா நுவன் வெதசிங்க அப் பதவிக்கு மேலதிகமாக மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் , பிரதிக் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...