ஜனாதிபதியைச் சந்தித்தார் எகிப்து தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி

Date:

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள், இன்று (18) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
எகிப்து நாட்டுச் சிவில் அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளராகப் புதிதாக நியமனம் பெற்றுள்ள அவர், இலங்கையுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், ஹுஸைன் அவர்கள் தொடர்ந்து எடுத்துரைத்தார்.
இலங்கைக்கான எகிப்து தூதுவராக ஹுஸைன் அவர்கள் இந்நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த சேவையை, ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே மற்றும் எகிப்து தூதரகத்தின் ஆலோசகர் கரீம் அபுலெனயின் (Karim Abulenein) ஆகியோரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...