பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும்!

Date:

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை திறந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டன.பல்கலைக்கழக மாணவர்களில் 11 வீதமானவர்கள் இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் இன்று வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...

மாற்றுத்திறனாளியான புத்தளத்தின் பிரபல கலைஞர் சலீம் கான் அவர்களுக்குப் பாராட்டு: வடமேல் மாகாண பாடல் போட்டியில் சாதனை!

புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம்....

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...

10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

அரசாங்கம் தனது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10,000 காணி...