பேஸ்புக் நிறுவன செயலிகளின் முடக்கத்தால் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வந்தர் பட்டியலில் பின்தள்ளப்பட்டார்!

Date:

சர்வதேச ரீதியில் நேற்றிரவு (04) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. இதனால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் உலக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதத்தினால் சரிவை எதிர்நோக்கியுள்ளன.அதற்கமைய, 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஸக்கர்பேர்க்கை ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளி பில் கேட்ஸ் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கிடையில் சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Down Detector) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...