போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரிலிருந்து வெளியேறியது நடப்பு சம்பியன் மும்பை!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக இஷான் கிஷான் 84 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 52 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணி சார்பில் அதிகபடியாக அணித்தலைவர் மனீஷ் பாண்டே 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா 39 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றாலும் ப்ளே ஓஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...