கனிய எண்ணெய், துறைமுகம், புகையிரதம், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (29) ஜனாதிபதியினால் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பாகவும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய கடந்த 11 ஆம் திகதி முதல் வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.