இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

Date:

இன்று (28) காலை காத்தான்குடியில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்ததாக நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைதி செய்யப்பட்டுள்ளதாகவும் , உயிரிழந்த இளைஞன் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது ஆதம்பாவா முஹம்மத் அம்ஹர் என்பவராவார்.

பொலிஸார் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், 

கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி சம்பவ தினமான இன்று ( 28) அதிகாலை 5.30 மணிக்கு பயணித்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் இருந்த மற்ற நபர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...