இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையில் பாதிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.மேல் , தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் ,மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மின்னல் தாக்கங்கள் அதிகம் இடம்பெறலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்.